ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' |

விஜய் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. தமிழ்நாடு முழுக்க தனது மக்கள் இயக்கத்தை வலுவாக கட்டமைத்திருக்கிறார். அமைப்பு ரீதியாக வலுவானதாக அதை மாற்றி உள்ளார். அடிக்கடி மாவட்ட நிர்வாகிகளை, தொகுதி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். பல்வேறு நலத்தட்ட உதவிகள் வழங்கவும், உள்ளூர் பிரச்சினைகளில் முன்னுக்கு நிற்கவும் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் அடுத்தகட்டமாக அவரது கவனம் பெண்கள் பக்கம் திரும்பி இருக்கிறது. ரசிகர்களை போலவே பெண்களையும் மாநிலம் முழுவதும் அமைப்பு ரீதியாக வலுப்படுத்த முடிவு செய்திருக்கிறார். இதற்காக மாவட்ட, தொகுதி மகளிர் அணி நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்திருக்கிறார். வருகிற 9ம் தேதி காலை 10 மணிக்கு பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவகத்தில் அவர்களை சந்தித்து பேசுகிறார். தற்போது விஜய் அமெரிக்காவில் இருக்கிறார். இதற்காக அவர் சென்னை திரும்புவார் என்று தெரிகிறது. ஒருவேளை திரும்பாவிட்டால் ஆன்லைன் மூலமாக பெரிய திரையில் தோன்றி அவர் பெண் நிர்வாகிகளுடன் பேச ஏற்பாடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.