தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

சென்னை : நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், இந்த சீரியலுக்கான டப்பிங் பேசிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
மாரிமுத்துவின் நிஜ பெயர் மறைந்து போகி அவர் நடித்து வந்த சீரியலின் ஆதி குணசேகரன் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமானது. சமூகவலைதளங்களில் ரசிகர்களும் எதிர்நீச்சல் குணசேகரன் என குறிப்பிட்டே அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரின் பல பேட்டிகளையும் பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு காட்சியில் தனக்கு நெஞ்சு வலிப்பது போன்று கூறுவார் மாரிமுத்து. அதில் உடம்பு வலியா அல்லது மனசு வலியா என தெரியவில்லை. அப்பப்ப வலி வருது, ஏதோ எச்சரிக்கை பண்ணுவது என டயலாக் பேசி இருப்பார். அந்தக்காட்சியை இப்போது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து நிஜமாகவே உங்களுக்கு இப்படி நடந்துவிட்டதே... என தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.