இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
சென்னை : நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில் காலமானார். சின்னத்திரையில் எதிர்நீச்சல் என்ற சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கேரக்டரில் மிரட்டல் வில்லனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், இந்த சீரியலுக்கான டப்பிங் பேசிய போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.
மாரிமுத்துவின் நிஜ பெயர் மறைந்து போகி அவர் நடித்து வந்த சீரியலின் ஆதி குணசேகரன் பெயர் மக்கள் மத்தியில் பிரபலமானது. சமூகவலைதளங்களில் ரசிகர்களும் எதிர்நீச்சல் குணசேகரன் என குறிப்பிட்டே அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரின் பல பேட்டிகளையும் பதிவிட்டு நினைவு கூர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் ஒரு காட்சியில் தனக்கு நெஞ்சு வலிப்பது போன்று கூறுவார் மாரிமுத்து. அதில் உடம்பு வலியா அல்லது மனசு வலியா என தெரியவில்லை. அப்பப்ப வலி வருது, ஏதோ எச்சரிக்கை பண்ணுவது என டயலாக் பேசி இருப்பார். அந்தக்காட்சியை இப்போது ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்து நிஜமாகவே உங்களுக்கு இப்படி நடந்துவிட்டதே... என தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.