ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
அட்லி இயக்கத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள ஜவான் படம் நேற்று திரைக்கு வந்துள்ளது. இந்த படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருப்பதோடு, கடந்த 10 ஆண்டுகளில் ஷாரூக்கான் நடிப்பில் வெளியான படங்களில் சிறந்த படம் என்ற விமர்சனங்களையும் பெற்றுள்ளது. இது ஷாரூக்கான் படம் என்றாலும் கூட பாலிவுட்டில் தான் என்ட்ரி கொடுத்துள்ள முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று வருவதால் உற்சாகத்தில் இருக்கிறார் நயன்தாரா. அடுத்தடுத்து அவர் ஹிந்தி படங்களில் தொடர்ந்து நடிப்பார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் நுழைந்த நயன்தாரா, தனது மகன்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். தற்போது கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தனது மகன்களுக்கு பட்டு வேஷ்டி அணிவித்து அவர்கள் பூஜை அறைக்கு தவழ்ந்து செல்வது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு, கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.