ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தை அடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிய அட்லீ, அதன் பிறகு ஹிந்தியில் ஷாரூக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வந்தார். அந்த படம் நேற்று திரைக்கு வந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகை பிரியாவை திருமணம் செய்து கொண்ட இயக்குனர் அட்லிக்கு 9 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு மீர் என்று பெயர் வைத்துள்ளார்கள். என்றாலும் இதுவரை மகனின் முகத்தை வெளி உலகுக்கு காட்டாமல் இருந்து வந்த இயக்குனர் அட்லி, நேற்று ஜவான் திரைக்கு வந்த நிலையில் , தனது மகன் மீர் தன்னுடைய மார்பில் படுத்து தூங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதோடு, ஜவான் படவேலைகளில் பிஸியாக இருந்ததால் எனது மகனுக்கு நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்று கூறியிருந்த அட்லீ, தற்போது இன்னும் நான்கு மாதங்களுக்கு தனது மகனுடன் ஜாலியாக பொழுதை கழிக்க போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.