தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ஒரு காலத்தில் இசையும், தமிழும் செழித்து வளர்ந்த இடம் யாழ்ப்பாணம். பல ஆண்டுகளாக அங்கு நடந்த உள்நாட்டு போரால் எப்போதும் துப்பாக்கி சத்தமும், குண்டு மழையும், ரத்த ஆறும் ஓடியது. போர் முடிவுக்கு வந்து தற்போது அமைதி திரும்பி இருக்கும் நேரத்தில் அங்கு சென்று முதன் முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார், தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
'சவுண்ட்ஸ் ஆப் தி சவுத்' என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியை காண எந்த வித கட்டணமும் இல்லை. அதோடு முற்றவெளி மைதானம் என்ற இடத்தில் திறந்தவெளியில் நடக்கிறது இந்த இசை நிகழ்ச்சி. வருகிற 30ம் தேதி மாலை 4 மணி முதல் நடக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் “யுத்தத்தின் மூலமும், சமீபகாலமாக பொருளாதாரக் கொந்தளிப்பின் ஊடாகவும் பயணப்படும் அங்குள்ள தமிழ் சமூகத்திற்கு தைரியத்தையும், உறுதியையும் வழங்க வேண்டும் என்ற சந்தோஷின் நீண்டகால ஆசை இப்போது இந்த இசை நிகழ்ச்சி மூலம் நிறைவேற உள்ளது.
யாழ்ப்பாண மக்களுக்கு 'சவுண்ட்ஸ் ஆப் தி சவுத்' இலவச இசை நிகழ்வாக இருக்கும். பிற வழக்கமான இசை நிகழ்ச்சிகளைப் போல அல்லாமல், 'சவுண்ட்ஸ் ஆப் தி சவுத்' பல்வேறு தெற்காசிய கலாச்சாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இசைக் கலவை, பிரபலமான பின்னணி பாடகர்கள் முதல் அற்புதமான சுயாதீன கலைஞர்கள் வரை பல்வேறு வகைகளையும், இசைக்கலைஞர்களையும் இந்த நிகழ்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. சந்தோஷ் நாராயணனனே இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் இருப்பதால் இந்த இசை மொழி, கலாச்சாரம் போன்ற எந்தவிதமான தடையும் இல்லாமல் அனைத்து வகையான பார்வையாளர்களிடமும் சென்றடையும் என்பது நிச்சயம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.