படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சினிமா தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகன் கடந்த 2021ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்குவதில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக கூறி 16 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளார். அதைபோலவே மேலும் இரண்டு பேரிடம் 8 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது போலீஸ் விசாரனையில் தெரியவந்தது.
இதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் ரவீந்தர் சந்திரசேகரனை கைது செய்துள்ளனர். இந்நிலையில், சீரியல் நடிகையும் ரவீந்தரின் மனைவியுமான மகாலெட்சுமி, ரவீந்தருக்கு சிறையில் விஐபிகளுக்கு வழங்கப்படும் ஏ-கிளாஸ் சிறை வழங்கவேண்டும் என எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மற்றொரு மனுவில் ரவீந்தரை ஜாமினில் வெளிவிடக்கோரியும் கேட்டிருந்தார். இந்த இரண்டு மனுக்களையும் விசாரித்த நீதிமன்றம் உடனடியாக மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.