'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர், ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்பட்ட ஏஆர் ரஹ்மானின் இமேஜை கடந்த வாரம் அவர் சென்னையில் நடத்திய 'மறக்குமா நெஞ்சம்' இசை நிகழ்ச்சி அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது.
பல்லாயிரம் பேர் இசை நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் நுழையக் கூட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வந்தனர். பெண்கள் மீது பாலியல் சீண்டல்கள் நடந்தது என்றெல்லாம் கூட குற்றச்சாட்டுகள் எழுந்தது. கடந்த வாரம் முழுவதும் டிவிக்களில் விவாதம் நடத்தும் வரை அந்த இசை நிகழ்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
கடும் விமர்சனங்கள் எழுந்த பின் ஏஆர் ரஹ்மான் அவரது டுவிட்டர் தளத்தில் டிக்கெட்டுகளின் காப்பியையும், அவர்கள் குறைகளையும் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதன்பின் ரஹ்மான் தரப்பிலிருந்து 4000 பேருக்குக் கட்டணத் தொகையைத் திருப்பி அனுப்புவதாக செய்திகள் வெளிவந்தன. பல சினிமா பிரபலங்களும் ரஹ்மானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்தனர்.
இந்நிலையில் தனக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களுக்கு நன்றி தெரிவித்தோ, பணம் திருப்பித் தரப்படுவது குறித்தோ சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் ரஹ்மான் பதிவிடவில்லை. சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு அப்டேட் தரும் ரஹ்மான் கடந்த ஒரு வார காலமாக அமைதி காத்து வருகிறார்.