தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
திரைப்படங்களில் சண்டை காட்சிகளை வடிவமைக்கும் சண்டை இயக்குனர்கள், மற்றும் சண்டை கலைஞர்களுக்கென்று தனியாக யூனியன் உள்ளது. இந்த சங்கத்தில் ஏற்கெனவே உறுப்பினராக இருப்பவர்களின் வாரிசுகள் எளிதில் உறுப்பினராகிவிட முடியும், புதியவர்கள் உறுப்பினராகவது கடினம். இந்த நிலையில் முதன் முறையாக ஸ்டண்ட் யூனியனில் உறுப்பினராக சேருவதற்கு நன்கு ஸ்டண்ட் கலை பயிற்சி தெரிந்த வெளி நபர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட இருக்கிறது.
அடுத்த மாதம் 21ம் தேதி இந்த தேர்வு நடக்கிறது. 18 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். குறைந்த பட்சம் 10ம் வகுப்பு படித்திருக்க வேண்டும், கார், பைக் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். நீச்சல் பயிற்சி, ஜிம்னாஸ்டிக், சிலம்பம், வாள் பயிற்சி பெற்றிருந்தால் சிறப்பு தகுதியாக கருதப்படும். கலந்து கொள்கிறவர்கள் உள்ளூர் காவல் நிலையித்தில் எந்த குற்ற வழக்கும் இல்லை என்கிற சான்றிதழ் பெற்று வரவேண்டும். இந்த தேர்வு இனி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சங்க நிர்வாகிகள் இதனை தெரிவித்தனர்.