பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? | லகான் கிராம மக்களுடன் அமர்ந்து ‛சிதாரே ஜமீன் பர்' படத்தை பார்த்த அமீர்கான் | பிளாஷ்பேக்: காட்சியும், கானமும் “நான் பாடும் பாடல்” | உழைக்கும் கரங்கள், உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன், பீஸ்ட் - ஞாயிறு திரைப்படங்கள் | சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் |
கடந்த 2005ல் வெளியாகி ஹிட்டான சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளது. பி வாசு இயக்க, ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, கங்கனா ரணவத், மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி காங்கே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி எனும் கீரவாணி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியை ஐதராபாத்தில் நடத்திய சந்திரமுகி 2 படக்குழுவினர், அதைத் தொடர்ந்து ஐதராபாத் ஜூபிளி ஹில்ஸில் இருக்கும் பெத்தம்மா தல்லி கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளனர்.
சமீபகாலமாக தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர்கள் தங்களது படம் வெற்றிகரமாக ஓடவேண்டும் என்பதற்காக இந்த கோயிலுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கூட தான் நடித்த சாகுந்தலம் பட ரிலீஸிற்கு முன்னதாக நடிகை சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் இங்கு சென்று வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.