தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

மலையாளத்தில் 35க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளவர் அனில். மம்முட்டி நடித்த 7 படங்களை இயக்கி உள்ளார். அனில் தமிழில் இயக்கி உள்ள படம், 'சாயாவனம்'. தாமோர் சினிமா சார்பில் சந்தோஷ் தாமோதரன் தயாரித்து வில்லனாக நடிக்கிறார். சவுந்தரராஜா, தேவானந்தா, அப்புக்குட்டி, ஜானகி, வெற்றிவேல் ராஜா, மேத்யூ மம்ப்ரா நடிக்கின்றனர். எல்.ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பொலி வர்கீஸ் பாடல்களுக்கு இசை அமைக்கிறார். எல்.வி.முத்து கணேஷ் பின்னணி இசை அமைக்கிறார்.
படம் குறித்து அனில் கூறுகையில் ‛‛வருடம் முழுவதும் அதிக மழை பொழியும் அடர்ந்த வனம் சூழ்ந்த ஒரு கிராமத்தில், புது மணப்பெண் எதிர்கொள்ளும் போராட்டத்தை 'சாயாவனம்' படம் விவரிக்கிறது. இத்தலைப்புக்கு 'அடர்ந்த காடு' என்று பொருள் இருக்கிறது. இது படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களின் குணத்தைக் குறிக்கும். ஒவ்வொரு கேரக்டரும் காடு போல் அடர்த்தியானது. அவர்களிடம் பல்வேறு ரகசியங்கள் மறைந்துள்ளன.
திருமணம் நடந்த அன்றே கணவன் காணாமல் போகிறான். தனித்துவிடப்படும் அவள் அந்த மலைகிராமத்தில் எத்தகைய பிரச்னைகளை சந்திக்கிறாள், தன் கணவனை அவள் கண்டுபிடித்தாளா? அவனுக்கு என்ன ஆனது என்பதுதான் படத்தின் திரைக்கதை. முழு படமும் ஆண்டு முழுவதும் மழை பெய்யும் சிரபுஞ்சியில் படமாகியுள்ளது'' என்றார்.