ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சுந்தர். சி இயக்கத்தில் இதற்கு முன்பு வெளிவந்த அரண்மனை 1, 2, 3 ஆகிய பாகங்களை தொடர்ந்து தற்போது அரண்மனை படத்தின் 4ம் பாகத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர். சி. இதில சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கிறார். நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா என இருவரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இவர்களுடன் யோகி பாபு, வி.டி.வி.கணேஷ், டெல்லி கணேஷ், ஜே பி, விச்சு, கேஜிஎப் ராம், சேசு, சந்தோஷ் பிரதாப், தீரஜ் விஷ்ணு ரத்தினம், நமோ நாராயணன், மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதுவும் பேய் படம் என்றாலும் முதல் மூன்று பாகங்கள் போலவே குடும்பங்கள் கொண்டாடும் வகையிலான படமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார் சுந்தர் சி. இந்த நிலையில் இதன் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு அதன் உடன் இத்திரைப்படம் 2024 பொங்கலுக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர். இந்த படத்தை சுந்தர் சியின் மனைவியும், நடிகையுமான குஷ்பு தயாரிக்கிறார்.