கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் |

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், விஷால், எஸ்ஜே சூர்யா, ரித்து வர்மா மற்றும் பலர் நடிப்பில் கடந்த மாதம் 15ம் தேதி வெளியான படம் 'மார்க் ஆண்டனி'. விஷால், எஸ்ஜே சூர்யா இருவரும் இரு வேடங்களில் நடிக்க, டைம் டிராவல் கதையாக வெளிவந்த இந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்து வெற்றிப் படமானது.
இப்படத்தின் டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை வைத்தே படம் வெற்றி பெறும் என்று படம் வெளியாவதற்கு முன்பே சொன்னார்கள். அது போலவே படமும் வெற்றி பெற்று வசூலைக் குவித்தது. விஷால் நடித்து இதுவரை வெளிவந்த எந்த ஒரு படமும் 100 கோடி வசூலைப் பெற்றதில்லை. அவர் நடித்து 2018ல் வெளிவந்த 'இரும்புத் திரை' படம் 60 கோடி வரை வசூலித்தது. அதுதான் அவரது படங்களில் அதிக வசூலைப் பெற்ற படம்.
இப்போது அந்த வசூலை 'மார்க் ஆண்டனி' முறியடித்துள்ளது. இன்னும் சில நாட்களில் இப்படம் 100 கோடி வசூலைத் தொட்டுவிடும் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு டுவிட்டரில் பதிலளித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார். விஷாலின் முதல் 100 கோடி படமாக இந்தப் படம் அமையப் போகிறது.