தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். நேற்று அக்டோபர் 2ம் தேதி காலை இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய், வெங்கட் பிரபு, பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி மற்றும் தயாரிப்பு தரப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இன்று அக்டோபர் 3ம் தேதி சென்னையில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கத்தில் பாடல் காட்சியுடன் இதன் படப்பிடிப்பை தொடங்கினர். இந்த பாடல் காட்சிக்காக ஏ.ஐ டெக்னாலஜி பயன்படுத்தி உருவாக்குவதாக கூறப்படுகிறது. இப்போது இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் இயக்குகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.