ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
விஷ்ணு விஷால், அமலாபால், சரவணன் நடித்த ராட்சசன் படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் 2ம் பாகத்தின் பணிகள் தொடங்கி விட்டது என்று படத்தை தயாரித்த ஆக்சஸ் பிலிம் பேக்டரி அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
'ராட்சசன்' படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிறது. இயக்குநர் ராம்குமார் இந்தப் படத்திற்கான கதையை சொல்ல ஆரம்பித்ததில் இருந்து படத்தின் திரையரங்கு வெளியீடு வரை இந்தப் படம் மீது நாங்கள் அனைவரும் வைத்த நம்பிக்கை, அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவையே இந்த வெற்றிக்குக் காரணம் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஒரு தயாரிப்பாளராக, 'ராட்சசன்' எங்கள் எல்லோருக்கும் 'கேம் சேஞ்சர்' படமாக அமையும் என்ற வலுவான நம்பிக்கை எனக்கு இருந்தது. ஆனால், எங்களின் எதிர்பார்ப்புகளையும் தாண்டி பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்தப் படத்திற்குக் கொடுத்த வரவேற்பு எங்களை ஆச்சரியப்படுத்தியது.
படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆனாலும், திரையரங்குகளில் 'ராட்சசன்' படத்திற்குக்கு கிடைத்த கைதட்டல் மற்றும் பாராட்டுகள் இப்போதும் உற்சாகப்படுத்துகிறது. இதுமட்டுமல்லாது, நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும் என்ற பெரும் நம்பிக்கையை ஆக்செஸ் பிலிம் பேக்டரிக்கு தரும் விதமாகவும் இந்தப் படம் அமைந்தது.
ராட்சசன் படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் ஆவதை ஒட்டி ஆக்சஸ் பிலிம் பேக்டரி 'ராட்சசன் 2' படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதை அறிவிக்கிறது. மேலும், இதுகுறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதிர்பார்த்ததை விட விரைவில் வெளியாகும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.