தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கடந்த 2014ம் ஆண்டில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடித்து வெளிவந்த திரைப்படம் 'ஜிகிர்தண்டா'. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது 'ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.
இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா இணைந்து நடிக்கின்றனர். முதல் பாகத்திற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் 'மாமதுரை' என பெயரில் வருகின்ற அக்டோபர் 9ம் தேதி அன்று மதியம் 12.12 மணியளவில் வெளியாகிறது என படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் இந்த வருட தீபாவளிக்கு வெளியாகிறது .