இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர் வெற்றி படங்களை குவித்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச இயக்குனர்களில் ஒருவராக மாறியுள்ளார் லோகேஷ் கனகராஜ். தற்போது நடிகர் விஜயை வைத்து 'லியோ' படத்தை இயக்கியுள்ளார். வருகின்ற அக்டோபர் 19ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் இப்போது லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டு வருகிறார். இதில் ரஜினிகாந்த் 171வது படம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கூறியதாவது: "ரஜினி 171வது படம் நான் இதுவரை இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்டு இருக்கும். எனக்கு இது ஒரு புதிய முயற்சி. இந்த கதையை 20 நிமிடம் ரஜினி சாரிடம் கூறினேன். சமீபத்தில் ரஜினி சார் உடன் இப்படம் குறித்து போனில் பேசும் போது 'தூள் கிளப்பிற்லாம் கண்ணா' என ரஜினி சார் கூறினார். இரண்டு வாரத்திற்கு முன்பு இந்த படத்திற்காக ஆபிஸ் பூஜை நடைபெற்றது. இதன் படப்பிடிப்பு அடுத்த வருடம் மார்ச் மாத இறுதியில் அல்லது ஏப்ரலில் துவங்கும்" என தெரிவித்தார்.