ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்கள் சில வருடங்களிலேயே பிரிந்தனர். அதன்பின் இருவரும் அவர்களது பிரிவைப் பற்றி அதிகம் பேசிக் கொண்டதில்லை.
சமந்தா அவரது வலது இடுப்புப் பகுதியில் நாக சைதன்யாவின் செல்லப் பெயரான 'சாய்' என்று குறிக்கும் ஆங்கில எழுத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். அது பற்றி ஒரு பதிவிட்டும் அறிமுகப்படுத்தினார். அவரது முதுகுப் பக்கத்தில் அவரும், நாகசைதன்யாவும் இணைந்து நடித்த முதல் படமான 'ஏ மாய சேவவே' படத்தின் பெயரைக் குறிக்கும் வகையில் 'ஒய்எம்சி' என்ற ஆங்கில வார்த்தையை டாட்டூவாகப் போட்டுள்ளார். அடுத்து அவரது கையின் வலது மணிக்கட்டுப் பகுதியில் 'வைக்கிங் குறியீடு' என்று சொல்லப்படும் ஒரு டாட்டூவையும் வைத்துள்ளார். அதே போன்றதொரு டாட்டூவை நாகசைதன்யாவும் அவரது வலது மணிக்கட்டுப் பகுதியில் போட்டிருக்கிறார்.
சமந்தா நேற்று சில போட்டோஷுட் புகைப்படங்களை இன்ஸ்டா தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவரது கணவர் பெயரை டாட்டூவாகக் குத்தியிருந்தது காணப்படவில்லை. அந்த டாட்டூவை அழித்துவிட்டாரா அல்லது போட்டோஷாப் மூலம் அதை நீக்கிவிட்டாரா என்பது தெரியவில்லை. 'சாய்' என்பதை மட்டும் அழித்தாரா அல்லது நாகசைதன்யாவுடன் தொடர்புடைய மற்ற இரண்டு டாட்டூக்களையும் அழித்துவிட்டாரா என்பதும் சந்தேகமாக உள்ளது.
சமந்தாவின் அசத்தலான புகைப்படங்களுக்கு லைக் போட்ட ரசிகர்கள் சிலர் இந்த சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.