ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான மெஹ்ரின் பிரதிஷ்டா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் படங்களில் நடித்திருந்தார். தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
மெஹ்ரின் பிரதிஷ்டாவுடன் வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. கிரைம் த்ரிலர் ஜார்னரில் உருவாகி உள்ள இந்த படத்தின் டைட்டில் உள்ளட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.