தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான மெஹ்ரின் பிரதிஷ்டா தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால், பட்டாஸ் படங்களில் நடித்திருந்தார். தற்போது எந்த முன்னறிவிப்பும் இன்றி சத்தமின்றி ஒரு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஏ.ஆர்.ஜாபர் சாதிக்கின் ஜே.எஸ்.எம்.பிக்சர்ஸ் மற்றும் இர்பான் மாலிக்கின் எம்பரர் என்டர்டெயின்மென்ட் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. சபரிஷ் நந்தா இயக்கத்தில், அஜ்மல் தஹ்சீன் இசையில், பிரபு ராகவ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது.
மெஹ்ரின் பிரதிஷ்டாவுடன் வசந்த் ரவி, சுனில், கல்யாண் மாஸ்டர், மற்றும் அனிகா சுரேந்திரன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை 5ம் தேதி தொடங்கி தற்போது நிறைவடைந்துள்ளது. கிரைம் த்ரிலர் ஜார்னரில் உருவாகி உள்ள இந்த படத்தின் டைட்டில் உள்ளட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.