தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள படம். இப்படத்திற்கு அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. முதலில் வெளியிட்ட ஆணையில் எத்தனை மணிக்கு முதல் காட்சியை ஆரம்பிக்கலாம், எத்தனை மணிக்கு முடிக்கலாம் என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.
இதனால், சில தியேட்டர்களில் காலை 8 மணி காட்சிக்கே முதல் காட்சியை நடத்துவதாக முன்பதிவை ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்று அரசு தரப்பில் மீண்டும் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டார்கள். அதன்படி காலை 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவில் 1.30 மணிக்குள் அந்த 5 காட்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். இவற்றை மீறுகிறார்களா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தியிருந்தார்கள்.
நேற்று மாலை வெளியான அந்த ஆணையைத் தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் காலை காட்சி 9 மணிக்கு என்பதை உடனடியாக மாற்றினார்கள். இருப்பினும் கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில தியேட்டர்களில் இன்னும் காலை காட்சி 8 மணி என்பதை மாற்றாமல் இருக்கிறார்கள். அத்தியேட்டர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.