தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவராஜ்குமார். கடந்த 25 வருடங்களாக கன்னடத்தில் மட்டுமே நடித்து வந்த இவர் சமீபகாலமாக தமிழில் கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம், இவருக்கு கர்நாடகாவையும் தாண்டி மிகப்பெரிய அளவில் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுக் கொடுத்துள்ளது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெயிலர் படம் மூலம் தனக்கு கிடைத்த வரவேற்பு பற்றி அவர் கூறும்போது, ‛‛பத்து நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் ஒரு படத்தின் மூலம் இந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு பெற முடியுமா, இத்தனை படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். ஆனாலும் இப்போது தமிழ்நாடு, ஆந்திரா, வெளிநாடு என எங்கு சென்றாலும் ஜெயிலர் ஜெயிலர்.. நரசிம்மா.. என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு வெளிநாடுகளிலும் என்னுடன் செல்பி எடுக்கிறார்கள். என் மனைவி கூட எட்டு நிமிட காட்சிகளில் நடித்ததற்கு இப்படிப்பட்ட ஒரு வரவேற்பா என ஆச்சரியப்பட்டு பேசுகிறார். குறிப்பாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கிளைமாக்சில் என்ட்ரி கொடுத்த சூர்யாவுக்கு கிடைத்த வரவேற்புக்கு இணையாக எனக்கும் கிடைத்திருக்கிறது" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.