இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் |
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ மீது பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் 2008ம் ஆண்டு பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளை கூறினார். தனுஸ்ரீ பிரபல நடிகர்கள், இயக்குனர்கள் மீது மீடூ புகார் கூறியதை தொடர்ந்து மீடூ புகாருக்கு ஆளான நடிகர்கள் சார்பில் ராக்கி சாவந்த், தனுஸ்ரீ மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால் தனுஸ்ரீ மும்பையின் ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் போலீசார் இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் மும்பை ஓஷிவரா போலீசார் ராக்கி சாவந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து தனுஸ்ரீ கூறும்போது “கடந்த 2008ம் ஆண்டு 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்ற படத்தில் நானும், ராக்கி சாவந்தும் நடித்தோம். அப்போது எனக்கும், ராக்கி சாவந்துக்கும் பிரச்னை ஏற்பட்டது. அதனால் அவரை தயாரிப்பாளர் நீக்கினார். அதன்பின் கடந்த 2018ம் ஆண்டு சிலர் மீது நான் 'மீடூ' புகார் அளித்தேன். அதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ராக்கி சாவந்த், எனக்கு எதிராக பல்வேறு பாலியல் அவதூறுகளை பரப்பினார். அத்தனைக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. அவர் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது” என்றார்.