ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முக்கிய போட்டியாக பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான போட்டி நேற்று (அக்.,14) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தானை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த போட்டியை காண ஏராளமான அரசியல் தலைவர்களும், நடிகர், நடிகைகளும் குவிந்தார்கள்.
தமிழ் நடிகர்களில் நடிகர் சதீஷும் இந்த கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்துள்ளார். அப்போது பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தியதைக் கொண்டாடும் விதமாக அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கானோர் வந்தே மாதரம் பாடலை பாடி உள்ளார்கள். அப்போது நடிகர் சதீஷூம் சேர்ந்து அந்த பாடலை பாடியுள்ளார். இது குறித்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.