'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் |

மாஜி ஹீரோயினான அம்பிகா, அஜித் நடித்த உயிரோடு உயிராக, அமர்க்களம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அமர்க்களம் படத்தில் நடித்து வந்த போது அஜித் செய்த ஒரு உதவி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛அமர்க்களம் படத்தில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்ற ஒரு தகவலை செய்தித்தாள் மூலம் பார்த்தார் அஜித். உடனடியாக அது குறித்து விசாரித்தவர் தனது அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி, இதை உடனடியாக அந்த மருத்துவமனைக்கு கொண்டு கொடுங்கள் என்று உத்தரவு போட்டார்.
இப்படி தன்னிடத்தில் நேரில் வந்து உதவி கேட்க வராமலேயே செய்தித்தாளில் வந்த ஒரு தகவலை பார்த்து அது குறித்து விசாரித்து தாமாக தேடிச் சென்று உதவி செய்யக் கூடியவர்தான் அஜித்குமார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது'' என்று கூறியுள்ளார் நடிகை அம்பிகா.