ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் குற்றம்சாட்டி இருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை சொன்னால் என் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று அவர் சொன்னது பல யூகங்களை உண்டாக்கியது.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் விளக்கமளித்துள்ளார். அது வருமாறு: சிவகார்த்திகேயன் எங்களின் குடும்ப நண்பர். எங்கள் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட மனிதர். எனக்கும் இமானுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது நாங்கள் பிரிந்துவிடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் எங்களுக்கு இடையே சமாதானம் செய்து வைக்க எல்லாவிதமான முயற்சிகளையும் செய்தார்.
இமானோட விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் ஆதரவாக இல்லாதது பிடிக்கவில்லை. நியாயத்து பக்கம் நின்றார். ஒரு வருடத்திற்கு முன்பே பெண்ணையெல்லாம் பார்த்த பிறகு தான் இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் முடியாதுன்னு சொன்னதுக்கு அரசியல்வாதிகளை வைத்து உங்கப்பாவை கொன்னுடுவோம் என்று மிரட்டி 46 நாட்களிலே விவாகரத்தும் வாங்கினார்.
இமானுக்கு இப்போ பட வாய்ப்புகள் இல்லை. அதுனாலதான் இப்படி எல்லாம் பேசி விளம்பரம் தேடுகிறார். அது மூலமாக பட வாய்ப்புகளை பிடிக்க நினைக்கிறார். இந்த விஷயம் என்னை விட சிவகார்த்திகேயனை எந்தளவு பாதிக்கும் என்று அவர் யோசிக்கவில்லை. எங்களுக்கு நல்லது நினைத்த ஒருவருக்கு இப்படி ஒரு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதற்காக வருந்துகிறேன்.
இவ்வாறு மோனிகா கூறியுள்ளார்.