ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

2000-ம் ஆண்டில் பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபு தேவா நாயகனாக நடித்த டபுள்ஸ் சென்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஸ்ரீகாந்த் தேவா. அதன்பிறகு குத்து, குமரன் சன் ஆப் மகாலட்சுமி, ஜித்தன், சிவகாசி உள்பட ஏராளமான படங்களுக்கு இசையமைத்தார். தற்போது கருவறை என்ற குறும்படத்துக்கு இசை அமைத்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார். 69வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகாந்த் தேவா அளித்த பேட்டியில், ‛‛இந்த தேசிய விருது நான் இசையமைத்துள்ள கருவறை என்ற குறும்படத்திற்காக கிடைத்திருக்கிறது. இந்திய ஜனாதிபதி கையில் இந்த விருதை வாங்கியது மகிழ்ச்சியாகவும் பெருமையாக உள்ளது. இந்த விருதை இசையமைப்பாளரான எனது தந்தை தேவாவுக்கு அர்ப்பணிக்கிறேன். என் அப்பா ஏராளமான விருதுகள் வாங்கி இருக்கிறார். என்றாலும் நான் வாங்கியுள்ள இந்த விருதை அவர் சிறப்பாக நினைப்பார். மேலும், இதற்கு முன்பு கடந்த 20 ஆண்டுகளாக நான் இசையமைத்த எத்தனையோ படங்கள் என்னுடைய பெயர் போட்டு விருதுகளுக்கு சென்றுள்ளது. அப்போது விருது கிடைத்ததில்லை. ஆனால் இந்த படத்துக்கு இசையமைக்கும்போது விருது கிடைக்கும் என்ற எதிர்பார்க்கவே இல்லை. ஆனால் விருது கிடைத்திருக்கிறது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஸ்ரீகாந்த் தேவா.