ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தமிழ் சினிமாவில் வெற்றிகரமான படங்களைக் கொடுத்த இயக்குனர்களுக்கு அவர்கள் இயக்கத்தில் நடித்த ஹீரோக்கள் பரிசளிப்பதும், அந்த ஹீரோக்களை வைத்து படங்களைத் தயாரித்தவர்கள் ஹீரோக்களுக்கு பரிசளிப்பதும் பல வருடங்களாக இருந்து வருகிறது.
ரஜினிகாந்த் நடித்து வெளியான 'ஜெயிலர்' படத்தின் பெரும் வெற்றிக்காக அந்தப் படத்தில் நடித்த ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு விலையுயர்ந்த கார்களைப் பரிசளித்தார் அப்படத்தின் தயாரிப்பாளர்.
'லியோ' படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர் லலித்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் கார் பரிசளிப்பது குறித்து விஜய் சொன்ன ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். 'மாஸ்டர்' படத்தைத் தயாரித்த போது அதன் வெற்றிக்காக விஜய்க்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்க நினைத்து விஜய்யிடம் பேசினாராம் லலித்குமார். அதற்கு பதிலளித்த விஜய், “அதுதான் சம்பளம் கொடுத்துட்டீங்களே, கார் எதற்கு ?,” எனச் சொன்னார் என்ற தகவலைப் பகிர்ந்துள்ளார்.
இந்த 'கார்' விவகாரத்தை சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பகிர்ந்து வருகிறார்கள் விஜய் ரசிகர்கள்.