இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
'அண்டே சுந்தரனிகி' படத்தின் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் மீண்டும் நானி புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இது நானியின் 31வது படமாக உருவாகிறது. இதனை டிவிவி எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும், இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பு மற்றும் பூஜை நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க நடிகை பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இப்போது இதில் வில்லனாக நடிக்க நடிகர் எஸ்.ஜே. சூர்யா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்கிறார்கள். இதற்கு முன்பு எஸ்.ஜே. சூர்யா தெலுங்கில் படங்களை இயக்கியுள்ளார். மேலும் ஸ்பைடர் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். தற்போது கேம் சேஞ்சர் தெலுங்கு படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.