ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பார்த்திபன் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த நிலையில் தனது அடுத்த படத்திற்கு டி.இமான் இசையமைக்க இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் அவர் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛வாவென வாய்ப்பிழந்து வரவேற்று வாய் நனைய முத்தமிட்டு, இறுதிவரை இருக்க விரும்பி இருக அணைத்தாலும், திட்டமிட்டபடி சட்டென விட்டு விலகி சென்று விடும் சென்ற வினாடிகள்.
தும்பை பூவின் மீது தூய்மையான பனித்துளி பறந்து, தும்பிகளின் மெல்லிய ரீங்காரத்தைக் கூட மெலோடியாய் ரசிக்கும் சில உறவுகளும் பூப்பதும் உண்டு. இசையை விட தூய்மையானது எது. சென்ற படத்தில் ரஹ்மானுடன் இணைந்த நான் வரும் படத்திலும் ஒரு மானுடன் இணைகிறேன். இம்மான் இமான். அபார ஞானமும் அயராத உழைப்புமாய் அடுத்தடுத்த மணிகளில் மனிதர் ஐந்து பாடல்களை பிரசவித்தார். இன்னும் இரண்டு கர்ப்பத்தில். மைனாவின் குரல் போல் இவரின் இசையும் இனிமை. அன்றிலிருந்து அவரின் இசையும் ஒரு அன்றில் பறவையாய் என் ரசனை வானில் பறந்து கொண்டு இருந்தது இனிமை இசையாய். ஓகே டைட்டில் அறிவிப்போம் விரைவில்...'' என்று பதிவிட்டு, டி. இமான் கம்போசிங்கில் ஈடுபட்டிருக்கும் ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.