தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். 'கம்மட்டிபாடம்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார். 'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததன் மூலம் இங்கு புகழ் பெற்றார். 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமிற்கு வில்லனாக நடித்துள்ளார்.
விநாயகன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். குறிப்பாக அவர் மீது ஏகப்பட்ட அடிதடி வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது குடிபோதையில் போலீஸ் நிலையத்திலேயே கலாட்டா செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எர்ணாகுளம் அருகே உள்ள கலூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த விநாயகன் குடியிருப்பு வாசிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீசிற்கு குடியிருப்புவாசிகள் தகவல் கொடுத்தனர்.
போலீசார், விநாயகனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அங்கும் அவர் தகராறில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனை செய்து, அவர் மது அருந்தியதை உறுதி செய்தனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.