குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி |

யுவராஜ் தயாளன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், அபர்ணதி, ஸ்ரீ, சானியா ஐயப்பன் மற்றும் பலர் நடிப்பில் இந்த மாதம் 6ம் தேதி வெளிவந்த படம் 'இறுகப்பற்று'. அன்றைய தினம் வெளியான 9 படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் மட்டுமே தாக்குப் பிடித்து இன்று 25வது நாளைக் கடந்திருக்கிறது.
இது குறித்து படத்தின் கதாநாயகர்களில் ஒருவரான விக்ரம் பிரபு, “நன்றி, நன்றி, நன்றி... இறுகப்பற்று படத்திற்குக் கிடைத்த அன்பு… 4 வாரங்களைக் கடந்தும் தியேட்டர்களில் இருப்பதும் எங்கள் குழுவினருக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இது தியேட்டர்களில் மட்டும் கிடைத்த வெற்றி அல்ல. வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்கான செயல்பாட்டில் மக்களுக்குச் செய்த விதத்திலும் கிடைத்த வெற்றி. இது போன்ற படங்கள் மில்லியனில் ஒன்று. அதை உங்கள் அனைவருக்கும் கொண்டு வந்த இந்த அற்புதமான குழுவில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்… நன்றியுடன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் நடித்த 'லியோ' படம் வெளிவந்த பின்னும் இந்தப் படம், தியேட்டர்களில் எந்தவிதமான சத்தமும் ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இது போன்ற படங்களுக்கு வசூல் முக்கியமல்ல, மக்களின் வரவேற்பே முக்கியம்.