முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரீதிவ்யா. அதன் பிறகு காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, மருது, பென்சில் உட்பட பல படங்களில் நடித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளாக எந்த படத்தில் நடிக்காமல் இருந்த ஸ்ரீ திவ்யா, தற்போது விக்ரம் பிரபுவுடன் ரெய்டு என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன்பிறகும் புதிய படங்களில் நடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் திருமணம் பற்றி கூறும்போது, ‛‛என்னுடைய திருமணம் கண்டிப்பாக காதல் திருமணம் தான். என்னுடைய காதலரையே திருமணம் செய்து கொள்வேன். அவர் யார்? எப்போது திருமணம்? என்பதை எல்லாம் அதற்கான நேரம் வரும்போது வெளியிடுவேன்'' என்று தெரிவித்திருக்கிறார் ஸ்ரீ திவ்யா.