தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
1950, 60களில் தமிழ் சினிமாவில் கோலோச்சிய நடிகர்களில் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் இருவரும் மிக மிக முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும்தான் அப்போதைய தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றவர்கள்.
எம்ஜிஆர் வியாபார ரீதியிலான படங்களில் நடித்து வெற்றி பெற, சிவாஜி கணேசன் விதவிதமான கதாபாத்திரங்களை ஏற்று குடும்பத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வந்தார். இருவருக்கும் இடையே ஆரோக்கியமான போட்டிதான் அப்போது இருந்தது.
1964ம் ஆண்டு தீபாவளி தினமான நவம்பர் 3ம் தேதி எம்ஜிஆர் நடித்த 'படகோட்டி', சிவாஜி கணேசன் நடித்த 'நவராத்திரி', 'முரடன் முத்து', எஸ்எஸ் ராஜேந்திரன் நடித்த 'உல்லாச பயணம்' ஆகிய படங்கள் வெளிவந்தன.
'படகோட்டி' படத்தில் எம்ஜிஆர் மீனவர் வேடத்தில் நடித்திருந்தார். ஈஸ்ட்மென் கலரில் இந்த திரைப்படம் உருவானது. எம்எஸ் விஸ்வநாதன் இசையில் அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார். படத்தின் அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டானவை, இன்றும் பலரது வீடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
'நவராத்திரி' படத்தில் சிவாஜிகணேசன் 9 வேடங்களில் நடித்திருந்தார். அவரது தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படமும் வியாபார ரீதியாக வெற்றியை பெற்றது. எம்ஜிஆர், சிவாஜி போட்டியில் 'படகோட்டி' படம் வசூலில் பெரிய வெற்றியைப் பெற்றது. சிவாஜி நடித்து வெளிவந்த மற்றொரு படமான 'முரடன் முத்து' படம் வெற்றி பெறாமல் போனது.
தீபாவளி போட்டியில் அதிக வசூலைக் குவித்து போட்டியில் முந்தினார் எம்ஜிஆர்.