சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
தமிழ் சினிமா உலகில் கடந்த 20 வருடங்களாக முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் த்ரிஷா. அவரது திரையுலகப் பயணத்தில் இடையில் கொஞ்சம் வேகத் தடை வந்தாலும் '96' படம் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையைத் தந்தது. அதன்பின் வந்த 'பொன்னியின் செல்வன்' அவருக்கு இன்னும் பெயரைப் பெற்றுத் தந்தது. நீண்ட இடைவெளிக்குப் பின் விஜய் ஜோடியாக 'லியோ' படத்திலும் நடித்தார்.
அப்படத்தின் வெற்றி விழா நேற்று டிவியில் ஒளிபரப்பானது. அதை முன்னிட்டு அவர் நேற்று இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அந்த விழாவில் விஜய்யுடன் பக்கத்தில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து சில எமோஜிக்களையும் பதிவிட்டுள்ளார். “ரோஜாப்பூ இருக்கும் ஒரு கை, கண், இன்பினிட்டி (முடிவில்லாத)” ஆகிய எமோஜிக்கள்தான் அவை.
அந்த புகைப்படமும், பதிவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ரசிகர்கள் அவரவர் கற்பனைகளுக்கு பல்வேறு விதமாக கமெண்ட் செய்து வருகிறார்கள். விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சமீப காலங்களில் சில கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் த்ரிஷாவின் இந்தப் பதிவு அதிகம் கவனிக்கப்படுகிறது.