தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இரவின் நிழல் படத்தை அடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் ஆரம்ப கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டிருக்கிறார் பார்த்திபன். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலை ஏற்கனவே ஸ்ருதிஹாசன் பாடிய நிலையில், தற்போது ஸ்ரேயா கோஷலும் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இது குறித்த தகவலை எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு இருக்கிறார் பார்த்திபன்.
இதற்கு முன்பு பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் மாயவா தூயவா என்றொரு பாடலை ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடி தேசிய விருது பெற்றவர்தான் இந்த ஸ்ரேயா கோஷல். இந்த நிலையில் மீண்டும் பார்த்திபன் இயக்கியுள்ள இந்த படத்தில் டி.இமான் இசையில் அவர் ஒரு பாடல் பாடி இருக்கிறார். இந்த படத்தின் டைட்டில் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது.