பிளாஷ்பேக்: வித்தியாசமான தோற்றத்தில் விஜயகாந்த் நடித்து விஸ்வரூப வெற்றிகண்ட "வானத்தைப்போல" | தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் |

தமிழகத்தில் புதிய படங்கள் வெளியாகும் போது அரசு அனுமதித்த நேரங்களில் மட்டுமே சிறப்புக் காட்சிகளைத் திரையிட வேண்டும். அதற்காக அரசுக்கு விண்ணப்பித்து அனுமதியைப் பெற வேண்டும். அப்படித்தான் கடந்த மாதம் வெளியான 'லியோ', கடந்த வாரம் வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஜப்பான்' ஆகிய படங்கள் அனுமதி பெற்று சிறப்புக் காட்சிகளை நடத்தினார்கள்.
இந்நிலையில் தமிழக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத்தின் தலைவராக இருக்கும் திருப்பூர் சுப்பிரமணியத்திற்குச் சொந்தமான திருப்பூர் சக்தி சினிமாஸ் திரையரங்கில் சல்மான் கான் நடித்த 'டைகர் 3' படத்திற்கு காலை 7 மணிக்கும், இரவு 11.50 மணிக்கும் கடந்த இரண்டு நாட்களில் சிறப்புக் காட்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அது குறித்த 'ஸ்கிரீன் ஷாட்'கள் சமூக வலைத்தளங்களில் பரவின.
இதையடுத்து உரிய அனுமதியின்றி 6 காட்சிகளைத் திரையிட்ட அத்தியேட்டருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.