வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் நேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் எஸ்ஜே சூர்யாவை, “இந்நாளின் திரை உலக நடிகவேள்', வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்,” எனப் பாராட்டியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு நேற்றே பதிலளித்து, “மிகச் சிறந்த பாராட்டைத் தந்த ரஜினிக்கு நன்றி..உங்கள் அன்பில், மழையில் நானும் குழுவினரும் நனைந்துவிட்டோம்,” என்று சூர்யா குறிப்பிட்டிருந்தார்.
படத்தைப் பார்த்த போது ரஜினிகாந்த்துடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட போட்டோவையும், தனியாக எடுத்த போட்டோவையும் இன்று பகிர்ந்து, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஒரு குறிஞ்சி மலர் - தலைவரிடமிருந்து ஸ்டேன்மென்ட்”, மற்றும் தலைவர் ரஜினிகாந்த் சாருடன் ஒரு குறிஞ்சி தருணம்… உங்கள் அன்பான கடிதத்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம், மிக்க நன்றி சார். ,” என இன்று மீண்டும் நன்றியைத் தெரிவித்துள்ளார் எஸ்ஜே சூர்யா.