ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ராகவா லாரன்ஸ், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான படம் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'. இப்படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் நேற்று படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அதில் எஸ்ஜே சூர்யாவை, “இந்நாளின் திரை உலக நடிகவேள்', வில்லத்தனம், நகைச்சுவை, குணச்சித்திரம் என மூன்றையும் கலந்து அசத்தி இருக்கிறார்,” எனப் பாராட்டியிருந்தார். அந்தக் கடிதத்திற்கு நேற்றே பதிலளித்து, “மிகச் சிறந்த பாராட்டைத் தந்த ரஜினிக்கு நன்றி..உங்கள் அன்பில், மழையில் நானும் குழுவினரும் நனைந்துவிட்டோம்,” என்று சூர்யா குறிப்பிட்டிருந்தார்.
படத்தைப் பார்த்த போது ரஜினிகாந்த்துடன் படக்குழுவினர் எடுத்துக் கொண்ட போட்டோவையும், தனியாக எடுத்த போட்டோவையும் இன்று பகிர்ந்து, “ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். ஒரு குறிஞ்சி மலர் - தலைவரிடமிருந்து ஸ்டேன்மென்ட்”, மற்றும் தலைவர் ரஜினிகாந்த் சாருடன் ஒரு குறிஞ்சி தருணம்… உங்கள் அன்பான கடிதத்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளோம், மிக்க நன்றி சார். ,” என இன்று மீண்டும் நன்றியைத் தெரிவித்துள்ளார் எஸ்ஜே சூர்யா.