ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே சரியான பட வாய்ப்பு இன்றி தவித்து வந்தார். அவரது ஆதர்ச நடிகரான விஜய் கூட அவருக்கு ஆதரவு தராத நிலையில் அவரால் ஆரம்ப கட்டத்தில் வளர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன், அவரது டைரக்சனில் நடிக்க முன்வந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஏ.ஆர் முருகதாஸ் இதற்காக ஒவ்வொரு மொழியிலிருந்தும் பிரபல நடிகர்களை அழைத்து நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
அந்த வகையில் நடிகர் மோகன்லால், துப்பாக்கி பட வில்லன் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். இது குறித்த தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.