அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
தர்பார் படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் கடந்த சில வருடங்களாகவே சரியான பட வாய்ப்பு இன்றி தவித்து வந்தார். அவரது ஆதர்ச நடிகரான விஜய் கூட அவருக்கு ஆதரவு தராத நிலையில் அவரால் ஆரம்ப கட்டத்தில் வளர்க்கப்பட்ட சிவகார்த்திகேயன், அவரது டைரக்சனில் நடிக்க முன்வந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் இந்த படத்தை பான் இந்தியா படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஏ.ஆர் முருகதாஸ் இதற்காக ஒவ்வொரு மொழியிலிருந்தும் பிரபல நடிகர்களை அழைத்து நடிக்க வைக்க தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
அந்த வகையில் நடிகர் மோகன்லால், துப்பாக்கி பட வில்லன் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று உள்ளதாம். இது குறித்த தகவல்கள் இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.