வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என நடிகர் விஜய்யை வைத்து வெற்றி படங்களை இயக்கினார். சமீபத்தில் பாலிவுட்டில் நடிகர் ஷாரூக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி அங்கும் வெற்றி பெற்றார்.
சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் அஜித்தை வைத்து படம் இயக்குவது குறித்து அட்லி கூறியதாவது, "ராஜா ராணி படத்திற்கு பிறகு நயன்தாரா உதவியுடன் அஜித்திற்கு முதலில் கதை சொல்ல முயன்றேன். அப்போது நான் பள்ளி மாணவன் போல் உள்ளதாக அஜித் என்னை கிண்டல் செய்தார் எனவும், அஜித்துக்காக ஒரு பயங்கரமான கதை இருப்பதாகவும், அஜித் ஓகே சொன்ன உடனேயே அந்த படத்தை எடுக்க நான் தயார்" என பகிர்ந்துள்ளார்.