இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். தமிழில் 2008ம் ஆண்டு தாம்தூம் என்ற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து 13 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய தலைவி படத்தில் நடித்தார் கங்கனா. பின்னர் சந்திரமுகி -2 படத்திலும் நடித்தார்.
இந்த நிலையில் தற்போது மாதவனை நாயகனாக வைத்து ஏ.எல்.விஜய் இயக்கும் புதிய படத்திலும் இணைந்துள்ளார் கங்கனா. தலைவி படத்திற்கு பின் மீண்டும் விஜய் இயக்கத்தில் கங்கனா நடிக்கிறார். அதோடு 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் மாதவன் உடன் நடிக்கிறார். சைக்காலஜி கலந்த திரில்லர் படமாக உருவாகிறது. ஜி.வி .பிரகாஷ் இசையமைக்கிறார்.
சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் திடீரென விசிட் கொடுத்துள்ளார். அந்த போட்டோக்களை பகிர்ந்து, ‛‛என்ன ஒரு அற்புதமான தருணம். எங்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸாக வந்து ஆச்சர்யப்படுத்தினார் ரஜினி'' என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் கங்கனா.