நடிகையின் ஆசையை நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலின் | அனுஷ்காவின் ‛காட்டி' டிரைலர் வெளியீடு : ரிலீஸ் தேதியும் அறிவிப்பு | ரவி மோகனை தொடர்ந்து சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் ஆர்யா | பராசக்தி படத்தில் நடிக்காதது ஏன் : லோகேஷ் கனகராஜ் விளக்கம் | ராம் சரண் படம் கைவிடப்பட்டது ஏன் : கவுதம் தின்னனூரி விளக்கம் | சிவகார்த்திகேயனின் மன அழுத்தத்தை போக்கும் பிள்ளைகள் | ‛கிங்டம்' படத்திற்கு எதிர்ப்பு : வருத்தம் தெரிவித்த படக்குழு | 23 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் ரீ-ரிலீஸ் ஆகிறது சுந்தரா டிராவல்ஸ் | ஆகஸ்ட் 8ல் 13 படங்கள் வெளியீடா ??? | வரவேற்பைப் பெறாத 'பரியேறும் பெருமாள்' ஹிந்தி ரீமேக் |
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் நேற்று அகமதாபாத் நகரில் உள்ள மோடி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் இந்தியாவை எதிர்த்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கிரிக்கெட் போட்டி என்றாலே நமது பல சினிமா பிரபலங்கள் அது பற்றி அவர்களது கருத்துக்களை வெளியிடுவார்கள். உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அதிர்ச்சித் தோல்வியடைந்ததால் பலரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்.
இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இத் தோல்வி குறித்து, “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடியவில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது,” என மிகவும் மன வருத்தத்தில் பதிவிட்டுள்ளார். அவரைப் போலவே பலரும் அவர்களது வருத்தமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.