இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் 'குற்றப் பரம்பரை'. 18வது நூற்றாண்டில் தமிழகத்தில் 89 சாதிகள் குற்றப் பரம்பரையினர் என வெள்ளையர்கள் குற்றப் பரம்பரை சட்டம் மூலம் அறிவித்தனர். ராமநாதபுரத்தைக் கதைக் களமாகக் கொண்ட இக்கதையில் அந்த சாதியினரின் வாழ்வியல் பற்றிய நாவலாக இருந்தது.
வேல ராமமூர்த்தி எழுதிய இந்த நாவலை மையமாக வைத்து இயக்குனர் பாலா திரைப்படமாக்க முயன்றார். இயக்குனரும், கதாசிரியருமான ரத்னகுமார் சேகரித்து வைத்த தரவுகளின் அடிப்படையில் இயக்குனர் பாரதிராஜாவும் இதைப் படமாக்க பிரம்மாண்ட பூஜை எல்லாம் நடத்தினார். அந்த சமயத்தில் பாலாவுக்கும், பாரதிராஜாவுக்கும் மோதல் எழுந்தது. ஏட்டிக்குப் போட்டியாக பத்திரிகையாளர் சந்திப்புகளை எல்லாம் நடத்தினார்கள்.
தற்போது இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இந்த 'குற்றப்பரம்பரை'யை வெப் சீரிஸ் ஆக உருவாக்க முயற்சித்து வருகிறார். பாரதிராஜாவிடம் பேசி அனுமதியும் வாங்கிவிட்டாராம். ஆனால், ரத்னகுமார் அதற்கு சம்மதிக்கவில்லை என்கிறார்கள். நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடரும் எண்ணத்தில் இருக்கிறாராம். அவரையும் எப்படியாவது சமாதானம் செய்த பின் வெப் சீரிஸை ஆரம்பிக்கலாம் என இப்போது கிடப்பில் போட்டுவிட்டார்களாம்.
ஒரு கதையை படமாக்குவதற்குள் எத்தனை சீரியஸ் சிக்கல்கள்.