பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் |

எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய நாவல் 'குற்றப் பரம்பரை'. 18வது நூற்றாண்டில் தமிழகத்தில் 89 சாதிகள் குற்றப் பரம்பரையினர் என வெள்ளையர்கள் குற்றப் பரம்பரை சட்டம் மூலம் அறிவித்தனர். ராமநாதபுரத்தைக் கதைக் களமாகக் கொண்ட இக்கதையில் அந்த சாதியினரின் வாழ்வியல் பற்றிய நாவலாக இருந்தது.
வேல ராமமூர்த்தி எழுதிய இந்த நாவலை மையமாக வைத்து இயக்குனர் பாலா திரைப்படமாக்க முயன்றார். இயக்குனரும், கதாசிரியருமான ரத்னகுமார் சேகரித்து வைத்த தரவுகளின் அடிப்படையில் இயக்குனர் பாரதிராஜாவும் இதைப் படமாக்க பிரம்மாண்ட பூஜை எல்லாம் நடத்தினார். அந்த சமயத்தில் பாலாவுக்கும், பாரதிராஜாவுக்கும் மோதல் எழுந்தது. ஏட்டிக்குப் போட்டியாக பத்திரிகையாளர் சந்திப்புகளை எல்லாம் நடத்தினார்கள்.
தற்போது இயக்குனரும், நடிகருமான சசிகுமார் இந்த 'குற்றப்பரம்பரை'யை வெப் சீரிஸ் ஆக உருவாக்க முயற்சித்து வருகிறார். பாரதிராஜாவிடம் பேசி அனுமதியும் வாங்கிவிட்டாராம். ஆனால், ரத்னகுமார் அதற்கு சம்மதிக்கவில்லை என்கிறார்கள். நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடரும் எண்ணத்தில் இருக்கிறாராம். அவரையும் எப்படியாவது சமாதானம் செய்த பின் வெப் சீரிஸை ஆரம்பிக்கலாம் என இப்போது கிடப்பில் போட்டுவிட்டார்களாம்.
ஒரு கதையை படமாக்குவதற்குள் எத்தனை சீரியஸ் சிக்கல்கள்.