ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுகுமார். அவரது இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படம் 'புஷ்பா'. அப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.
முதல் பாகத்திற்காக இயக்குனர் சுகுமாருக்கு 25 கோடி சம்பளம் தந்ததாகத் தகவல் வெளியானது. அப்படம் சுமார் 350 கோடி வசூலித்தது என்பது பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல். அதனால், இரண்டாம் பாகத்திற்கான வியாபாரம் முதல் பாகத்தை விடவும் அதிகமாக எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி உரிமையை மிகப் பெரும் விலைக்கு விற்றிருக்கிறார்களாம். இரண்டாம் பாகத்தின் வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமாக நடப்பதால் படத்தின் இயக்குனருக்கும் பெரும் தொகை ஒன்றை சம்பளமாக வழங்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்ததாம். ஓடிடி உரிமையில் பெற்ற கணிசமான தொகையுடன் சேர்த்து அவருக்கு 100 கோடி சம்பளத்தைக் கொடுக்கப் போகிறார்கள் என டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜமவுலிக்குப் பிறகு தெலுங்குத் திரையுலகத்தில் 100 கோடி சம்பளத்தைப் பெறும் இரண்டாவது இயக்குனர் சுகுமார். தமிழில் இன்னும் எந்த ஒரு இயக்குனரும் 100 கோடி சம்பளத்தைத் தொடவில்லை.