தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் திரைக்கு வந்து நேற்றோடு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்தது. அதனால் அப்படம் குறித்த பல பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் மாநாடு படம் குறித்து எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள பதிவுக்கு, ‛லூப் தொடர்கிறது' என்று ஒரு பதில் கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு.
அவர் இப்படி ஒரு பதிவை போட்டதை அடுத்து, மீண்டும் சிம்பு நடிப்பில் மாநாடு-2 படத்தை அதே லூப் கதையில் இயக்கப் போகிறார் என்று சிம்புவின் ரசிகர்களும், தற்போது விஜய் நடித்து வரும் 68-வது படத்தையும் மாநாடு படத்தைப் போலவே லூப் கதை அம்சத்தில் தான் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார், அதைத்தான் இப்படி லூப் தொடர்கிறது என்று அவர் பதிவிட்டிருக்கிறார் என விஜய் ரசிகர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.