பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் (கில்டு) செயல்பட்டு வருகிறது. இதன் தலைவராக தற்போது சண்டை இயக்குனர் ஜாக்குவார் தங்கம் இருக்கிறார். நேற்று இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்திற்கு வந்து சங்கத்தின் பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும், இதுவரை 22 லட்சம் வரை மோசடி நடந்துள்ளதாகவும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் கொடுத்தார்.
அவர் கொடுத்த புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது : தென்னிந்திய திரைப்பட தொலைக்காட்சி தயாரிப்பாளர் சங்கம் கடந்த 55 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 2018ம் ஆண்டு முதல் இந்த சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு, நான் செயல்பட்டு வருகிறேன். சங்கத்தின் நிர்வாகிகள் சிலர் சங்க உறுப்பினர்களை ஏமாற்றி பணம் கையாடலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் போலியான சங்கம் ஒன்றை ஆரம்பித்து, தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டனர். அவர்கள் போட்டி சங்கம் நடத்துவதற்கும், உண்மையான சங்கத்தின் பெயரை பயன்படுத்துவதற்கும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, உரிய தடை ஆணை பெறப்பட்டுள்ளது.
ஆனால் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். போலியான ஆவணங்களை காட்டி, தொடர்ந்து சங்க உறுப்பினர்களிடம் பணத்தை பெற்று, சங்கத்தின் கணக்கு உள்ள வங்கியில் செலுத்தாமல், லட்சக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர். உறுப்பினர்கள் கட்டிய பணத்தை வங்கி கணக்கில் செலுத்திவிட்டதாக வங்கி பெயரிலும் போலியான ரசீதுகளை தயாரித்து கொடுத்து ஏமாற்றி உள்ளனர். 22 லட்சம் அளவுக்கு அவர்கள் மோசடி செய்தது, ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வங்கியின் உண்மையான கணக்கில் 6 கோடி பணம் உள்ளது. அந்த பணத்தையும் மோசடி செய்யும் நோக்கில் செயல்படுகிறார்கள். சங்க ஊழியர்களையும், உறுப்பினர்களையும் மிரட்டி தொல்லை கொடுக்கிறார்கள். எனக்கும் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள். எனவே உரிய விசாரணை நடத்தி மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுப்பதோடு, சங்கம் தொடர்ந்து சிறப்பாக செயல்பட உரிய பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு புகார் மனுவில் ஜாக்குவார்தங்கம் தெரிவித்துள்ளார்.