படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளிவந்த படம் 'புஷ்பா'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது படமாகி வருகிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் நண்பன் கேஷவா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஜகதீஷ். முதல் பாகத்திலும் நடித்துள்ளார், இரண்டாம் பாகத்திலும் அவருக்கு படம் முழுவதும் வரும் கதாபாத்திரமாம்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜகதீஷ் தலைமறைவாகி இருந்தார். ஜுனியர்நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட பின்தான் அவர் தலைமறைவாகி இருக்கிறார். அப்பெண்ணின் தந்தை தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்ததைத் தொடர்ந்து பஞ்சகுட்டா போலீசார் ஜகதீஷைக் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தெலுங்குத் திரையுலகத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சக நடிகை ஒருவரது தற்கொலைக்கு ஒரு நடிகரே காரணமாக இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நடிகையை ஜகதீஷ் கொடுமைப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டதாக நடிகையின் அப்பா குற்றச்சாட்டில் தெரிவித்துள்ளார்.