தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

திரைப்படம் தொடர்பான பல புத்தகங்கள் எழுதியவரும் வசனகர்த்தாவுமான வேலுமணி காலமானார். விஜயகாந்தின் நெருக்கமான நண்பரான அவர் தேவன், எங்கள் ஆசான், விருதகிரி படங்களுக்கு வசனம் எழுதினார். 30 ஆண்டு திரை அனுபவம் கொண்ட வேலுமணி, இயக்குநர் வஸந்தின் 'பூவெல்லாம் கேட்டுப்பார்', 'ரிதம்' உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றினார்.
55 வயதான வேலுமணி பல்வேறு உடல்நல பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடலூரில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். வேலுமணி திருமணம் செய்து கொள்ளவில்லை. தம்பியும், தங்கையும் அவரை கவனித்து வந்தனர்.
விஜயகாந்த்தின் மீது மிகுந்த அன்பு கொண்ட வேலுமணி அவரது உடல்நிலை குறித்தும் மிகுந்த கவலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.