முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை தொடர்ந்து மீண்டும் மணிகண்டன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி உடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் மம்முட்டி நடிக்க முதலில் ஒப்பந்தம் ஆகியிருந்தார்.
இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இப்படம் ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கும் ஓடிடி வெப் தொடராக மாறியதால் இதிலிருந்து மம்முட்டி வெளியேறினார். இப்போது இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெரப் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இவர் தமிழில் ஆரண்ய காண்டம், பிகில், ஜெயிலர் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.