தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் ஆகியோருடன் போட்டி போட்டு தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கியவர்களில் முதன்மையானவர் விஜயகாந்த். அரசியலும் இறங்கி தனி கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். கடந்த சில வாரங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துமனையில் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினார்.
இன்று(டிச., 14) அவரது கட்சியான தேமுதிகவின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் உட்கார கூட முடியாத சூழலில் இருக்கும் விஜயகாந்த்தை நாற்காலியில் அமர வைத்து கூட்டத்தை நடத்தினார்கள். சரியாக உட்கார முடியாமல் சாய்ந்து விழப் போன விஜயகாந்தை இருவர் உடனே தாங்கிப்பிடிப்பதற்காக பின்புறமே நின்றிருந்தனர்.
அந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி விஜயகாந்த் மீது பரிதாபத்தை வரவழைத்திருக்கிறது. இப்படியெல்லாம் அவரைத் துன்புறுத்த வேண்டாமென பலரும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
திரைப்பட இயக்குனரான பாண்டிராஜும் அவரது கவலையையும், கோரிக்கையையும் பகிர்ந்துள்ளார். “கேப்டன் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு , இப்பொழுது சரியான ஓய்வு தேவை . அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்ட்டப்படுத்தாதீர்கள் ப்ளீஸ்... பிடித்த ஒரு 'நல்ல மனிதரை ' இப்படி பார்க்க ரொம்பவே கஷ்ட்டமா இருக்கு,” எனப் பதிவிட்டுள்ளார்.