தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் ஆரம்ப கட்டப்பணிகள் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டது. இந்த படத்திற்காக தனது பாடி லாங்குவேஜை மாற்றி, தலையில் பெரிய அளவில் முடி வளர்த்து வரும் சிம்பு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாடு சென்று சில தற்காப்பு கலை பயிற்சி பெற்று விட்டு நாடு திரும்பினார். என்றாலும் அப்படத்தின் படப்பிடிப்பு இப்போது வரை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் தற்போது ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது சிம்பு நடிக்கும் 48வது படம் பாகுபலி படத்திற்கு இணையாக ஒரு பிரமாண்டமான சரித்திர கதையில் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற தாமதமாகி வருவதாகவும், தொடர்ந்து சிம்பு உடற்பயிற்சி மூலம் தனது பாடி லாங்குவேஜை பராமரித்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருப்பதாகவும் ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரங்களில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.