அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் |

பிரதர், ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. இந்த படத்தை அடுத்து தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 படத்தில் ஜெயம் ரவி நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. முதல் பாகத்தில் அரவிந்த்சாமி வில்லனாக நடித்த நிலையில், இரண்டாம் பாகத்தில் வில்லனாக நடிப்பதற்கு பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது ஜெயம் ரவி கைவசம் வைத்திருக்கும் மூன்று படங்களின் படப்பிடிப்பையும் அடுத்தடுத்து முடித்துவிட்டு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தனி ஒருவன்-2 படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.